Saturday, May 29, 2010

முதிர் கன்னி...

விலை போக
முடியாமல்
விழி நீரைச்
சிந்துகிறாள்....
ஏழைத் தாயின்
வயிற்றில்
பிறந்ததால்....

Monday, May 24, 2010

நண்பர்கள்..!

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!

உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!

நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!

மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!

நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!



Monday, May 17, 2010

எனதன்புத் தந்தையே...!!

அன்புப் பொய்கையாய்
அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே...!

நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே...!

நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!

என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே...!!

Saturday, May 15, 2010

அஞ்சலி...

அங்கே என்ன?
கூச்சல்
குழப்பம்
அடிதடி
ரகளை - அது

வேறொன்றுமில்லை...
நடந்து கொண்டிருப்பது

"மௌன அஞ்சலி"