Monday, March 15, 2010

அந்தரங்கம் கலையாதோ...?

தாடி மீசை தான் வளர்த்து
சமரசமே கொள்கையென்று
நாடி நின்ற நல்லோர்கள்
நாட்டி வைத்த கருத்தையெல்லாம்
கேடிகளாய் வாழ்வோர்கள்
கீழ்த்தரமாய் மாற்றியதால்
வாடிவதை படுவோரை
வாழ்விப்பார் யாருளரோ...?

பக்கபலம் சிலகெட்ட
பதருகளைத் தான்சேர்த்து
மக்கள் நலம் என்றிடுவர்
மார்பு தட்டிப் பேசிடுவார்..!
தக்கவைக்கத் தங்களது
தலைமை நலம் பதவிகளை,
அக்கறையாய் செயல்படுவோர்
அந்தரங்கம் கலையாதோ...?


Post a Comment

2 comments:

  1. போலித் துறவிகளைப் பற்றிய உங்கள் மன வெளிப்பாடு பலரது மனக் குமுறலைப் பிரதி பலித்தது

    ReplyDelete
  2. மிக்க நன்றி... பாலன்

    ReplyDelete