அடைக்கலக் கோட்டையாய்
பற்றுக் கோடாய்
பாதுகாவலாய்
என் விடியலுக்கு வித்திட்ட
இதய சூரியனே...!
நடக்கவே தெரியாத
என்னை
வானில்
சிறகடிக்க வைத்த
இதய தெய்வமே...!
நான் இலட்சியத்தை அடைய
உம் முதிர்ந்த அனுபவத்தை
அடித்தளமாக்கித் தந்த
என்
முதல் ஆசானே...!
என்னக்காக
நீர் செய்த
தியாகங்கள் பெரிது
என் நெஞ்சில் உமக்கிருக்கும்
இடமும் பெரிது
எனதன்புத் தந்தையே...!!