Showing posts with label தாய் மண். Show all posts
Showing posts with label தாய் மண். Show all posts

Friday, February 19, 2010

யாழ் மண்...

பாணன் யாழ் மீட்டி
பரிசாய் பெற்ற மண்
காலங் காலமாய் - தமிழ்
மன்னர் ஆண்ட மண்.

ஈழத் திருநாட்டின்
தலையென இலங்கு மண் - தானை
தமிழ் தலைவன்
வந்துதித்த மண்

ஊதற் கடல்சூழ்ந்த
வீரம் விளைந்த மண் - வெஞ்
சமர் பல கண்டு
விழுப்புண் அடைந்த மண்

செங்குருதி படிந்த மண்
யான் பிறந்த மண் - என்
உயிரினும் மேலான
யாழ்ப்பாண மண்...!!