முகத்தை மழித்து..
உடம்பை குளித்து..
ஆடையைச் சலவை செய்து..
காலணியைப் பளபளப்பாக்கி..
அழகாய் அணிந்து கொண்டான்..
ஆனால்,
மனதை மட்டும்..???
தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!
தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!
மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!
மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!
உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!
நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?
நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!
மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!
நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!