எந்த சுதந்திரமும்
தேவையில்லை...
எழுத்து சுதந்திரத்தை
மட்டும் தாருங்கள்...!
பகல் முழுதும்
பாடு படுகிறேன்
படுத்துறங்கும் வேளையிலாவதும்
பெண்ணினத்தின்
பாரத்தை - எழுதிப்
பார்க்க விடுங்கள்..!
கட்டிலில்
கணவனை சுமப்பது
முதல்....
"கரு" வினில்
"குழந்தை" யை சுமப்பது
வரை...
அவள் படும்
அவஸ்தைகளை...
'கவிதை' யாய்
'கதை' யாய்
'கட்டுரை' யாய்
எழுத நினைத்து..
எட்டை புரட்டினால்....
என்குலத்தை - நானே
எழுதிப்பார்க்க நினைத்து
எழுத்து கோல் எடுத்தால்...
"....................
................
....................
............."
பகல் முழுதும்...
பாடு படுகிறேன்...
படுத்துறங்கும் - நேரத்தின்
இடை வேளையிலாவது...
என்...
கண்ணீருடன்...
கலந்துரையாட....
அனுமதி தாருங்கள்...!
Post a Comment
varththai illaiyadi thozhiye
ReplyDeleteஅதெல்லாம் தர முடியாது.. ஹி ஹி
ReplyDelete