Thursday, February 18, 2010

பிறக்க வேண்டும் புது யுகம்..

இந் நாட்டில் இடம் வேண்டும்
நானும் தன் மானத்தோடு வாழ
இல்லையேல் இறப்பதே மேல்...!

சாவதற்கும் அழிவதற்கும் வழிகோலும்
ஆளுக்கொரு நீதி, சாதிக்கொரு நீதி என்றால்,
எம் நெஞ்சில் இவ் விழிவெண்ணம் மாறாவரை...!

எப்படியும் வாழ்ந்தது போதும் - இனி
இப்படித்தான் வாழ வேண்டும் என்று - நில்
இச்சமுதாயம் இனியாவதும் படித்துக்கொள்ளட்டும் பாடம்...!

எங்களை விட்டால் போதும் வாழ, எங்கள் பாட்டில்
வாழட்டும் அவர்கள், அவர்கள் பாட்டில்
யாருக்கும் யாரும் தலை வணங்க தேவையில்லை...!

இல்லையேல் பிறக்க வேண்டும் புது யுகமும் புது மனிதனும்
அவன் காட்ட வேண்டும் நல்ல நட்பு வழி
நன்மை பெற வேண்டும் நானும் நாடும் உலகமும்...!


Post a Comment

1 comment:

  1. >>எங்களை விட்டால் போதும் வாழ, எங்கள் பாட்டில்
    வாழட்டும் அவர்கள், அவர்கள் பாட்டில்

    இந்த லைன்ஸ்ல எதுக்கு இத்த்னை பாட்டில்? ஹி ஹி
    டாஸ்மாக் பக்கமா?

    ReplyDelete