பறவைகளோடு நானும்
பறக்க பாடம் படிப்பேன் - மனச்
சிறகினை விரித்து
வானில் பறந்து
புவியை சுற்றி வட்டமடிப்பேன்!
மேகம் சிந்திடும்
தூரல்க ளெல்லாம் - என்
தேகத்தில் வந்து
விழட்டும் என்பேன்!
பசுமை கொஞ்சிடும்
புல்வெளி மீது - என்
சுமைகளை கொஞ்சமாய்
இறக்கி வைப்பேன்!
சோகம் சுமந்திடும்
நெஞ்சத்துள் எல்லாம்
சுகமே வந்து
சேரட்டும் என்பேன்!
இயற்கையின் மடிதனில்
கருவாய் வசிப்பேன்
இருக்கிற வரைக்கும்
புவிதனை ரசிப்பேன்!
Post a Comment
>>புவிதனை ரசிப்பேன்!
ReplyDeleteம் ம் வேற வழி இல்லை.. ஹி ஹி