Friday, February 19, 2010

ரசிப்பேன்...

சிறகுகள் விரிக்கும்
பறவைகளோடு நானும்
பறக்க பாடம் படிப்பேன் - மனச்

சிறகினை விரித்து
வானில் பறந்து
புவியை சுற்றி வட்டமடிப்பேன்!

மேகம் சிந்திடும்
தூரல்க ளெல்லாம் - என்
தேகத்தில் வந்து
விழட்டும் என்பேன்!

பசுமை கொஞ்சிடும்
புல்வெளி மீது - என்
சுமைகளை கொஞ்சமாய்
இறக்கி வைப்பேன்!

சோகம் சுமந்திடும்
நெஞ்சத்துள் எல்லாம்
சுகமே வந்து
சேரட்டும் என்பேன்!

இயற்கையின் மடிதனில்
கருவாய் வசிப்பேன்
இருக்கிற வரைக்கும்
புவிதனை ரசிப்பேன்!


Post a Comment

1 comment:

  1. >>புவிதனை ரசிப்பேன்!

    ம் ம் வேற வழி இல்லை.. ஹி ஹி

    ReplyDelete