Friday, February 19, 2010

நாங்கள் பூக்கள் பேசுகிறோம்....

மனிதனே...
இறைவன்
உங்களுக்கு
மனதை படைத்தான்....
எங்களுக்கு
மணத்தைக் கொடுத்தான்...!!

நாங்கள்
பூமியின் மேற்பரப்பில்
சிதறிக்கிடக்கும்
மாணிக்கங்கள்...
வைர
வைடூரியங்கள்..!!

நாங்கள்
எதையும்
எங்கும் யாசிப்பதில்லை...!!

தேடி வரும்
தென்றலை
மதிக்க தவறியதும் இல்லை..!!

தேசியக்கொடியின்
உச்சியில் இருந்து
உதிர்தலுக்கும்...

மணவாழ்வின்
உதயத்திற்கும்...
மங்கையரின்
கார்குழல் எழிலுக்கும்.....

இறைவனின்
திரு உருவத்திற்கும்...
மரணித்த உங்கள்
கல்லறைக்கும்....

இன்னும்
எல்லாவற்றுக்குமாய்
எங்களை
இணைத்துக் கொண்டவர்கள்
நாங்கள்.....

எங்கள்
வாழ்வையே
பிறருக்காக மட்டுமே
தியாகிக்கிறோம்......!!
நீங்கள்......???


Post a Comment

1 comment:

  1. >>எங்கள்
    வாழ்வையே
    பிறருக்காக மட்டுமே
    தியாகிக்கிறோம்......!!
    நீங்கள்......???

    ஹி ஹி ஹி

    ReplyDelete