Saturday, December 1, 2012

தேடல்...

மனம்
விசித்திரமானதுதான்
விலக விலகத்தான்
ஆசைப்படுகிறது..

மரணத்தின் சுவாசத்திலும்
ஏனோ மயங்குகிறது
எதையோ கேட்கிறது
எதற்காகவோ ஆசைப்படுகிறது..

இறுதி யாத்திரையின்
முடிவான அசைவிலும்
அந்தக் கண்கள்
கனவைச் சுமக்கின்றனவே…

ஏன் தெரியுமா?
"மனிதன் தேடுகிறான்!"



Thursday, November 15, 2012

மரணம்...!


ஓயாது
உழைக்கும்
மனிதனுக்குக் கிடைக்கும்
இளைப்பாறல்.!
மானிடச் செருக்கின்
முற்றுப் புள்ளி..!