வழியாத தேநீர்,
வீண் செலவாய்
தெரிந்த விருந்து,
வான விளக்கே
போதுமென்ற முற்றம்,
சுட்ட பகலிலும்
சுழலாத மின்விசிறி,
மருந்து எதற்கென
துணிந்த காய்ச்சல்,
புதிய கொள்கையாய்
கொண்டாடா பண்டிகைகள்,
சட்டம் இயற்றாமல்
குறையும் சனத்தொகை,
பட்டினியாய் சேமிப்பு புத்தகம்
வயிறு நிரம்பிய கடனட்டைகள்,
போதி மரம் இன்றியே
ஞானம் பெற்ற
புதிய ஞானிகள்,
இவை அனைத்தும்
விலையேற்றம் தந்த
இலவச இணைப்புக்கள்,
விலையேற்றமும்
பணவீக்கமும்
கை கோர்க்கும்
மணநாளில்,
சாட்சிக் கையெழுத்திட்டு
கண் கலங்கும்
அப்பாவிப் பொது மக்கள்!
Post a Comment
>>சித்தர்கள் ராச்சியம் பதிவிற்கு இனைப்புத் தர பெட்டியில் இருக்கும் நிரலை பயன் படுத்தலாம்
ReplyDeleteஹி ஹி ஹி