Monday, June 6, 2011

கந்தா நீ வரவேண்டும்!

பழநி பதியில் வாழ்பவனே! - எம்மை
பாதம் இரண்டால் ஆள்பவனே!
பழநி எனவே ஆனவனே! - என்றும்
காக்கும் உந்தன் பேரருளே!

அரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்
அல்லல் நீக்கி காத்திடவே
அரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்
அல்லல் போக்கி கத்திட்டாய்!

அன்பும் அருளும் நிறைந்தவனே! - கூடும்
அல்லல் தம்மை அழிப்பவனே!
இன்பம் அனைத்தும் உன்னாலே! எம்மை
என்றும் காப்பது உன்வேலே!

இமயந் தன்னில் பிறந்தவனே! - எங்கள்
இதய மெல்லாம் நிறைந்தவனே!
உமையின் மைந்தன் ஆனவனே! - காவடி
உனக்கென எடுத்தோம்! வரவேண்டும்!



Post a Comment

4 comments:

  1. அருமை! மிக்க நன்றி

    ReplyDelete
  2. பக்திபூர்வமான கவிதை.. அருமை..

    ReplyDelete
  3. கந்தா நீ வரவேண்டும்... பாடல் பரவசம்.. ஓம் சரவணபவ

    ReplyDelete