Friday, February 19, 2010

யாழ் மண்...

பாணன் யாழ் மீட்டி
பரிசாய் பெற்ற மண்
காலங் காலமாய் - தமிழ்
மன்னர் ஆண்ட மண்.

ஈழத் திருநாட்டின்
தலையென இலங்கு மண் - தானை
தமிழ் தலைவன்
வந்துதித்த மண்

ஊதற் கடல்சூழ்ந்த
வீரம் விளைந்த மண் - வெஞ்
சமர் பல கண்டு
விழுப்புண் அடைந்த மண்

செங்குருதி படிந்த மண்
யான் பிறந்த மண் - என்
உயிரினும் மேலான
யாழ்ப்பாண மண்...!!


Post a Comment

2 comments: