Friday, February 19, 2010

உணர்வுகள்...

வாசனையை நுகரும் நீ..
தன்னை
வதைத்துக் கொள்ளும்
ஊதுபத்தியின் வலியை உணர்ந்ததுண்டா..?

சிலை கண்டு மயங்கும் நீ ..
செதுக்கிய போது
சேதாரமான
துணுக்குகளை எண்ணி துயருற்றதுண்டா?

சரி!
சித்திரத்தை காணும் போது
அதன்
கலை மட்டுமே கண்ணுக்கு தெரிந்தால்
நீ சராசரி மனிதன்.

மாறாக -
வரைந்து வரைந்து
கரைந்த தூரிகை
விழிகளில் விளங்கினால்
நீதான் படைக்கும் பிரம்மன்..!!!


Post a Comment

1 comment:

  1. >>சிலை கண்டு மயங்கும் நீ ..
    செதுக்கிய போது
    சேதாரமான
    துணுக்குகளை எண்ணி துயருற்றதுண்டா?

    இல்லைங்க. எனக்கு நிறையா வேலை.. சாரி

    ReplyDelete