Friday, February 19, 2010

வா நண்பனே...!!

வா நண்பனே...!!
கடலில் விழுகின்ற மழைத் துளியாய்
நட்பில் நாமே கலப்போம்..!!

ஒரு மரம் ஒரு நாளும்
தோப்பாக முடியாது..!!

ஓர் கரத்தில் எழும் ஓசை
ஒருவருக்கும் கேட்காது..!!

நீ மட்டும் தனித்திருந்தால்
உலகம் என்றாகாது..!!

வா நண்பனே
வாழும் வரை நாம்
நட்பு பேணுவோம்..!!

உலகத்தின் நட்பால்
உயிர்கள் ஜீவிக்கும்..!!
உள்ளங்களின் நட்பால்
உன்னதம் ஜீவிக்கும்..!!


Post a Comment

1 comment:

  1. >>உலகத்தின் நட்பால்
    உயிர்கள் ஜீவிக்கும்..!!
    உள்ளங்களின் நட்பால்
    உன்னதம் ஜீவிக்கும்..!!

    யாருங்க இந்த ஜீ வி? டைரக்டர் மணி ரத்னம் தந்த தயாரிப்பாளர் ஜீ வி யா?

    ReplyDelete